Type Here to Get Search Results !

விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட கரோனா தடுப்பூசி காரணமல்ல: மருத்துவமனை விளக்கம்



நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள் கூறியதாவது:

இன்று காலை11 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக நடிகர் விவேக்கை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு அவசர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரது இதயத்துடிப்பு குறைவாக இருந்தது. உடனடியக ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாயான இடதுபுற கரோனரி குழாயில் 100% அடைப்பு இருந்தது. ஆஞ்சியோ சிகிச்சை மூலமாக அது சரிசெய்யப்பட்டது.

பின்னர் எக்மோ கருவி உதவியுடன்தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறார்.24 மணி நேரம் கண்காணித்த பிறகுதான் அவரது உடல்நிலை குறித்து கூற முடியும்.நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்தனர்.

Top Post Ad

Below Post Ad